செய்திகள்
மரணம்

வத்தலக்குண்டுவில் குளத்தில் மூழ்கி மாணவன் பலி

Published On 2020-03-25 09:03 GMT   |   Update On 2020-03-25 09:03 GMT
வத்தலக்குண்டு அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை. இவரது மகன் ராகுல்(12). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் ராகுல் அங்குள்ள வீரன்குளம் கண்மாயில் குளிக்க சென்றான்.

இந்த கண்மாயில் சிலர் மீன்பிடிப்பதற்காக வலைகள் போட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக சிறுவன் ராகுல் வலையில் சிக்கி கொண்டான். இதனால் அவனால் நீந்தி வெளியே வரமுடியவில்லை. இதில் அவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதனிடையே ராகுலை காணாமல் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

அவன் குளத்திற்கு குளிக்கசென்றதை அறிந்து அங்கு தேடினர். இதைதொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் குளத்தில் இறங்கி தேடியதில் சிறுவன் ராகுல் பிணமாக மீட்கப்பட்டான். இதைத்தொடர்ந்து அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News