செய்திகள்
கைது

தேர்தல் முன் விரோதம்- தந்தையை பாட்டிலால் குத்தி தாக்கிய மகன் கைது

Published On 2020-03-23 10:22 GMT   |   Update On 2020-03-23 10:22 GMT
தேர்தல் முன் விரோதத்தில் தந்தையை பாட்டிலால் குத்தி தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள புது ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் துர்க்கையாண்டி (வயது 50). இவரது மனைவி பாக்கியம். இவர்களது மகன் முத்துப்பாண்டி (வயது 34). துர்க்கையாண்டி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மயில் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பால முருகன் (12) என்ற மகன் உள்ளார். இரு குடும்பத்தினரும் தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மயில் கண்டமனூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முத்துப்பாண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் தான் சொல்லும் நபருக்கே ஓட்டு போட வேண்டும் என சித்தி மயிலிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்துப்பாண்டி சம்பவத்தன்று தனது தந்தையிடம் சென்று தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாட்டிலால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் துர்க்கையாண்டி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
Tags:    

Similar News