செய்திகள்
மரணம்

சின்னமனூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2020-03-21 11:35 GMT   |   Update On 2020-03-21 11:35 GMT
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

சென்னை புதுநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகன் நவீன்குமார் (வயது12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நவீன்குமார் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தான். சம்பவத்தன்று நவீன்குமார் அங்குள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றான்.

பின்னர் அவன் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றில் தேடினர். இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் தேடியதில் சிறுவன் நவீன்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டான். உடனே அவனை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக இறந்தான்.

இதுபற்றி சின்னமனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News