செய்திகள்
மணல் கடத்தல்

நரிக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்

Published On 2020-03-18 09:55 GMT   |   Update On 2020-03-18 09:55 GMT
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து நரிக்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

காரியாபட்டி:

நரிக்குடி பகுதியில் கிருதுமால் ஆற்றுப் பகுதியில் சில மாதங்களாக அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் மணல் மாபியாக்கள் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தி வைத்து அரசு அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். இதனால் மணல் லாரிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் நரிக்குடி சார்பு ஆய்வாளர் கமல் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விளாங்குடி ஓடை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போது 2 டிராக்டரில் மணல் அள்ளுவது கண்டறியப்பட்டது.

போலீசாரை கண்ட டிராக்டர் உரிமையாளர்கள் வாகனத்தை போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து நரிக்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது சம்பந்தமாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News