செய்திகள்
விபத்து

திருக்குறுங்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

Published On 2020-03-17 10:00 GMT   |   Update On 2020-03-17 10:00 GMT
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53) விவசாயி. சம்பவத்தன்று இவர் ராஜபுதூருக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். படலையார் குளம் கரையில் வந்தபோது பின்னால் வந்த பைக் ஜெயக்குமார் சென்ற பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் ஜெயக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் இறந்தார்.

இது குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News