செய்திகள்
குழந்தைகள் மீட்பு

பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு

Published On 2020-03-16 04:08 GMT   |   Update On 2020-03-16 04:08 GMT
கோவை சிக்னலில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட குழந்தைகளை போலீசார் ஆர்.எஸ்.புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை:

கோவை லாலிரோடு சிக்னலில் 2 குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த சிக்னலில் 1½ வயது பெண் குழந்தை மற்றும் 3 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் பிச்சை எடுத்தது தெரியவந்தது.

உடனே, பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டன. அவர்களை வைத்து பிச்சை எடுத்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகமோகன்(வயது 33), ராதா(30) ஆகியோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீட்கப்பட்ட குழந்தைகளை போலீசார் ஆர்.எஸ்.புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News