ஆனைமலை அருகே வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
கோவை:
ஆனைமலை அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பராம்பாளையம்- சிங்காநல்லூர் ரோட்டில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகாலிங்கம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளலூர் அருகே உள்ள விநாயகர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (64). சம்பவத்தன்று இவர் கோவை- வெள்ளலூர் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரங்கநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரங்கநாதன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.