செய்திகள்
தற்கொலை

வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-03-11 09:34 GMT   |   Update On 2020-03-11 09:34 GMT
கோவை மதுக்கரையில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனியார் கம்பெனி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 38). தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலைக்காக வங்கியில் லட்சக்கணக்கில் கடன் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சதாசிவம் நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் ஜெயகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாகாளி. இவரது மனைவி பழனியம்மாள் (60). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள நிலத்தடி தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News