செய்திகள்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 13 நாட்கள் ரத்து

Published On 2020-03-11 04:18 GMT   |   Update On 2020-03-11 04:18 GMT
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:

கடம்பூர்-வாஞ்சிமணியாச்சி-தட்டப்பாறை மற்றும் மணியாச்சி-கங்கைகொண்டானில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* தூத்துக்குடி-சென்னை எழும்பூர்(வண்டி எண்: 16130) இடையே காலை 7.50 மணி, எழும்பூர்-தூத்துக்குடி(16130) இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் எழும்பூர்-தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

* தாம்பரம்-நாகர்கோவில்(16191) இடையே இரவு 11 மணி, நாகர்கோவில்-தாம்பரம்(16192) இடையே மாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News