செய்திகள்
திருவண்ணாமலை அருகே 2 வீடுகளில் நகை திருடிய கொள்ளையன் கைது
திருவண்ணாமலை அருகே 2 வீடுகளில் நகை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகால் இடுக்குப் பிள்ளையார் கோவில் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபாலன்.
இவர் கடந்த 6-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விருத்தாச்சலம் சென்று விட்டார். அவர் மறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜகோபாலன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 6-ந் தேதி தனது வீட்டு வராண்டாவில் உள்ள டேபிள் மீது தனது ஒரு பவுன் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று கை கால் கழுவி விட்டு வந்து பார்த்தபோது அதனை மர்ம நபர் திருடி சென்று விட்டது தெரியவந்தது.
இதுபற்றி வெங்கடேசன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2வீடுகளிலும் திருடிய தானிப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை கைது செய்து அவர் திருடிய 6 பவுன் நகையை மீட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகால் இடுக்குப் பிள்ளையார் கோவில் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபாலன்.
இவர் கடந்த 6-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விருத்தாச்சலம் சென்று விட்டார். அவர் மறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜகோபாலன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 6-ந் தேதி தனது வீட்டு வராண்டாவில் உள்ள டேபிள் மீது தனது ஒரு பவுன் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று கை கால் கழுவி விட்டு வந்து பார்த்தபோது அதனை மர்ம நபர் திருடி சென்று விட்டது தெரியவந்தது.
இதுபற்றி வெங்கடேசன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2வீடுகளிலும் திருடிய தானிப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை கைது செய்து அவர் திருடிய 6 பவுன் நகையை மீட்டனர்.