செய்திகள்
நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.
சென்னை:
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். இதில் ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி திருமணத்தில் பங்கேற்ற ரஜினியின் சசோதரர் சத்ய நாராயணராவ் கூறம்போது:-
ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப் புத்தாண்டில் தெரிவிப்பார். கட்சி, கூட்டணி உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரே அறிவிப்பார்.
கட்சி தொடங்குவதற்கு முன்பு எங்களது சொந்த கிராமமான வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பத்திற்கு அவர் நிச்சயம் வந்து செல்வார். இதற்காக மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்து இருந்தது நினைவிருக்கலாம்.