செய்திகள்
கோப்பு படம்

கலசப்பாக்கம் வாலிபர் கொலை - மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

Published On 2020-02-28 13:23 GMT   |   Update On 2020-02-28 13:23 GMT
கலசப்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே நடந்த மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருவண்ணாமலை:

கலசப்பாக்கத்தை அடுத்த மேலாரணி கிராமத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு எலத்தூர் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றனர். இதனை மேலாரணி காலனி பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 25) மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கலையரசன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் திருவண்ணாமலை கோர்ட்டில் சரண் அடைந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் எலத்தூரை சேர்ந்த இளையராஜா (22) என்பவரும், நேற்று மேல்வன்னியனுரை சேர்ந்த பார்த்திபன் (25) என்பவரும் திருவண்ணாமலை மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News