செய்திகள்
கோப்பு படம்

நகை செய்து தருவதாக கூறி 26 பவுன் தங்க கட்டி மோசடி செய்த தொழிலாளி

Published On 2020-02-28 13:09 GMT   |   Update On 2020-02-28 13:09 GMT
கோவையில் நகை செய்து தருவதாக கூறி 26 பவுன் தங்க கட்டி மோசடி செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 57). தங்க நகை வியாபாரி.

இவர் சம்பவத்தன்று தன்னிடம் இருந்த 211.600 கிராம் தங்ககட்டியை எடுத்து கொண்டு ரவிகுமார் என்பவரிடம் சென்றார்.

அங்கு அவரிடம் தான் வைத்திருந்த தங்க கட்டியை கொடுத்து நகை செய்து தருமாறு கூறினார். ஆனால் பல நாட்களாகியும் ரவிக்குமார் நகை செய்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று, நாளை என இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராமசாமி சம்பவத்தன்று அங்கு சென்று ரவிக்குமாரிடம் தான் கொடுத்த தங்க கட்டியை திருப்பி கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.

இதையடுத்து ராமசாமி சம்பவம் குறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News