செய்திகள்
கைது

கொல்லங்கோடு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

Published On 2020-02-27 11:45 GMT   |   Update On 2020-02-27 11:45 GMT
கொல்லங்கோடு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
குளச்சல்:

கொல்லங்கோடு அருகே காஞ்சாம்புரத்தை அடுத்த கிழக்கு கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(வயது53). மரம் ஏறும் தொழிலாளி.

ஸ்ரீதரன் வீடு அருகே வசித்து வந்த குடும்பத்தினருக்கு 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளார். சம்பவத்தன்று மாணவி வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அவரை ஸ்ரீதரன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது பற்றி மாணவி, பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதரனை கைது செய்தனர்.

கைதான ஸ்ரீதரன் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News