செய்திகள்
திருப்பூரில் பனியன் நிறுவன அதிபர் தற்கொலை
திருப்பூரில் பனியன் நிறுவன அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகரை அடுத்த அன்னபூரணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் வீட்டின் கீழ் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி ஜாப் ஒர்க் செய்து வந்தார். அதிக அளவிலான ஆடைகளை எடுத்து செய்து வந்த அவர் உரிய நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் திணறி வந்தார்.
ஆர்டர் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் காந்தி நகரை அடுத்த அன்னபூரணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் வீட்டின் கீழ் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி ஜாப் ஒர்க் செய்து வந்தார். அதிக அளவிலான ஆடைகளை எடுத்து செய்து வந்த அவர் உரிய நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் திணறி வந்தார்.
ஆர்டர் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.