search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baniyan Company"

    • இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஏ.பி., நகரில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பொள்ளாச்சி, களியாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 36) என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், கட்டளைபட்டியை சேர்ந்த முனியாண்டி (49) என்பவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பனியன் துணி பண்டல்களை இறக்கி கொண்டிருந்தபோது இரண்டு துணி பண்டல்களை திருட்டுத்தனமாக காரில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தர்மராஜ், முனியாண்டியை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், முனியாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்புச் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவில் பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில், நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராமன் மகன் பிரபாகரன்(வயது 41) என்று தெரியவந்தது. அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் தங்கி கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×