செய்திகள்
திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தம்

பிளஸ்-1 மாணவி திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தம்

Published On 2020-02-26 10:31 GMT   |   Update On 2020-02-26 10:32 GMT
திருப்பத்தூர் அருகே பிளஸ்-1 மாணவிக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், அப்பகுதி வருவாய் ஆய்வாளர் தாமரை, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் மற்றும் சமூகநல அலுவலர்கள் மற்றும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்துவரும் 16 வயது சிறுமிக்கு, அவருடைய உறவினருடன் இன்று காலை கோவிலில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரிடம், 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதி வாங்கி கொண்டனர்.

Tags:    

Similar News