செய்திகள்
கோர்ட்டு தீர்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே கள்ளநோட்டு மாற்றிய 5 பேருக்கு மூன்று ஆண்டு ஜெயில்

Published On 2020-02-26 08:51 GMT   |   Update On 2020-02-26 08:51 GMT
ஊத்துக்கோட்டை அருகே கள்ளநோட்டு மாற்றிய 5 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே சத்தியவேடுவில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊத்துக்கோட்டையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ், சீதஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன், ராமு, செல்வன், சென்னையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றனர். அவர்களை சத்தியவேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஸ்ரீகாளாஸ்திரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து விசாரித்த நீதிபதி குருநாதம் தீர்ப்பளித்தார்.

அதில், கள்ள நோட்டுகளை மாற்றிய குற்றத்துக்காக சுபாஷ் சந்திரபோஸ், மணிகண்டன், ராமு, செல்வன், சீனிவாசன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

அதன்படி 5 பேரையும் போலீசார் கடப்பா சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News