செய்திகள்
கோப்புப்படம்

மண்டைக்காடு அருகே பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு

Published On 2020-02-25 11:41 GMT   |   Update On 2020-02-25 11:41 GMT
மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

மண்டைக்காடு கீழ்கரை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா (வயது24). இவர் நேற்று மாலையில் லெட்சுமிபுரத்தில் இருந்து மண்டைக்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பருத்திவிளை அருகே வரும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அனிஷா அருகே வந்த போது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தார்.

இதில் சுதாரித்துக்கொண்ட அனிஷா நகையை பிடித்துக் கொண்டு கொள்ளையனிடம் இருந்து போராடினார். மேலும் திருடன்... திருடன்... என அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் கொள்ளையன் அனிஷாவின் கையை தட்டிவிட்டு செயினை பறித்தார்.

இதில் அனிஷாவின் கையில் ½ எடையுள்ள நகை சிக்கியது. மீதி 8 ½ பவுன் நகையை திருடன் பறித்துச் சென்றான். இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அனிஷா கூறிய அடையாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சோதனைச்சாடிகளில் போலீசார் கொள்ளையன் குறித்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த நகைப்பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News