செய்திகள்
கைது

நிலக்கோட்டை அருகே தென்னையில் இருந்து கள் இறக்கிய பெண் கைது

Published On 2020-02-19 11:55 GMT   |   Update On 2020-02-19 11:55 GMT
நிலக்கோட்டை அருகே தென்னையில் இருந்து கள் இறக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ஊராட்சி, கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தோட்டத்தில் தென்னை கள் அரசு அனுமதி இன்றி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது ராஜபாளையம் அருகே உள்ள ரெங்கநாதன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மனைவி சக்தி ராக்கம்மாள் (வயது 40) அனுமதி இன்றி தென்னை கள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் சக்தி ராக்கம்மாளை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மும்தாஜ் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News