செய்திகள்
பென்னாகரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பென்னாகரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
பென்னாகரம்:
தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் கோவிந்த ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம் பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.