செய்திகள்
தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2020-02-18 06:59 GMT   |   Update On 2020-02-18 06:59 GMT
ஊத்துக்கோட்டை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவரது மகன் லோகநாதன் (25). பூண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

லோகநாதன் வேலைக்கு சரியாக செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவதை தந்தை கண்டித்தார். இதனால் மணம் உடைந்த லோகநாதன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News