செய்திகள்
தற்கொலை

காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை

Published On 2020-02-14 16:21 GMT   |   Update On 2020-02-14 16:21 GMT
காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவர் திடீர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவியரசன் (வயது17). இவர் கிருஷ்ணகிரி தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கவியரசன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து கவியரசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News