செய்திகள்
மரணம்

கும்பகோணம் அருகே லாரியின் அடியில் தூங்கிய காவலாளி பலி

Published On 2020-02-14 11:26 GMT   |   Update On 2020-02-14 11:26 GMT
கும்பகோணம் அருகே லாரியின் அடியில் தூங்கிய காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே நாதன் கோவில் காலனி தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் ஆனந்தன் (வயது 50).

இவர் சாக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிபக் கழகம் கொள்முதல் நிலையத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் டாரஸ் லாரி அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இதை கவனிக்காமல் லாரியை டிரைவர் எடுத்தபோது தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தன் மீது லாரி ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News