செய்திகள்
கைது

கரிவலம் வந்த நல்லூரில் லாரியில் மணல் கடத்தியவர் கைது

Published On 2020-02-12 11:42 GMT   |   Update On 2020-02-12 11:42 GMT
கரிவலம் வந்த நல்லூரில் லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்த நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் மகாதேவர்பட்டி அருகே உள்ள ஆற்றங்கரையில் சென்றபோது அங்கு 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

உடனே போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயன்றார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள உமைய தலைவன்பட்டியை சேர்ந்த சீனிபாண்டி என்பதும், தப்பியோடிய 2 பேர் மகாதேவர்பட்டியை சேர்ந்த பொன்மாடசாமி, கரிசல்குளத்தை சேர்ந்த திருப்பதி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சீனி பாண்டியை போலீசார் கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News