செய்திகள்
விபத்து

தேவதானப்பட்டி அருகே பாலத்தில் பைக் மோதி வாலிபர் பலி

Published On 2020-02-11 15:12 GMT   |   Update On 2020-02-11 15:12 GMT
தேவதானப்பட்டி அருகே பாலத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் இ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் தர்னிஷ் (வயது 21). இவர் ஐ.டி.ஐ படித்து விட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரை தேவதானப்பட்டியில் பஸ் ஏற்றி விட்டு ஜெயமங்கலம் வழியாக வடுகப்பட்டி சென்றார். பின்னர் அவர் ஊர் திரும்பினார்.

ஜெயமங்கலத்தில் இருந்து மேல்மங்களம் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தர்னிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி ஜெயமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தர்னிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News