செய்திகள்
கைது

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.72 ஆயிரம் பணம் திருடிய பெண் கைது

Published On 2020-02-11 11:12 GMT   |   Update On 2020-02-11 11:12 GMT
கோவையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.72 ஆயிரம் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை கணபதி அருகே உள்ள சின்னசாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சூர்யகலா (வயது 61). சம்பவத்தன்று இவர் டவுன் பஸ்சில் கணபதியில் இருந்து மதுக்கரைக்கு சென்றார். அப்போது தனது கைப்பையில் ரூ. 72 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றார்.

பஸ் வெரைட்டி ஹால் ரோடு அருகே சென்ற போது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சூர்யகலா கைப்பையில் வைத்து இருந்து ரூ. 72 ஆயிரம் பணத்தை திருடினார்.

பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யகலா சத்தம் போட்டார். உடனடியாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மூதாட்டியிடம் இருந்து பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுரை வண்டியூரை சேர்ந்த கலா (43) என்பது தெரிய வந்தது. பின்னர் கலாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News