செய்திகள்
மொபட் மீது கார் மோதல் - சென்னையை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலி
மரக்காணம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் சென்னை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மரக்காணம்:
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது புதுவையில் இருந்து சென்னைநோக்கி வந்த கார் திடீரென்று மொபட்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அப்துல் காதர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பலியான 2பேரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மரக்காணம் விரைந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது புதுவையில் இருந்து சென்னைநோக்கி வந்த கார் திடீரென்று மொபட்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அப்துல் காதர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பலியான 2பேரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மரக்காணம் விரைந்த வண்ணம் உள்ளனர்.