செய்திகள்
காரமடையில் நகைபறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த கல்லூரி மாணவி
கோவை மாவட்டம் காரமடையில் நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த கல்லூரி மாணவியின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
கோவை:
காரமடை நேரு நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக கண்ணார் பாளையம் ஓம் சக்தி நகர் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் காயத்ரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சாதுரியமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து சத்தம் போட்டர்.
அப்போது அங்கு ஓடி வந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்த யாசர் அரபத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
காரமடை நேரு நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக கண்ணார் பாளையம் ஓம் சக்தி நகர் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் காயத்ரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சாதுரியமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து சத்தம் போட்டர்.
அப்போது அங்கு ஓடி வந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்த யாசர் அரபத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டினர்.