செய்திகள்
கைது

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மேலும் 2 பேர் கைது

Published On 2020-02-07 10:06 GMT   |   Update On 2020-02-07 10:06 GMT
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கடந்த 26-ந் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சசிகுமார் தலைமையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News