செய்திகள்
விபத்து

தருமபுரியில் பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி

Published On 2020-02-05 14:48 GMT   |   Update On 2020-02-05 14:48 GMT
தருமபுரி அதகப்பாடியில் நடந்துசென்றவர் மீது பொக்லைன் எந்திரம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அதகப்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாக்கன் (வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அதகப்பாடி சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பெருமாக்கன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாக்கன் வலியால் கதறினார். 

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனிற்றி இன்று அதிகாலை 3 மணிக்கு பெருமாக்கான் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News