செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

வெள்ளகோவிலில் விபத்து- பெண் பலி

Published On 2020-02-03 11:02 GMT   |   Update On 2020-02-03 11:02 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்- முத்தூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரோமியோ. இவரது மனைவி நாகலட்சுமி(வயது35).

இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்து வரும் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுப்பவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு 11 மணியளவில் வேலையை முடித்து வீட்டிற்கு முத்தூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நாகலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நாகலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News