செய்திகள்
சென்னையில் உள்ள தாயாரிடம் சிறுவனை ஒப்படைத்த போலீசார்

தந்தை அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய கடலூர் மாணவன் சென்னையில் மீட்பு

Published On 2020-01-27 08:42 GMT   |   Update On 2020-01-27 08:42 GMT
தந்தை அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கடலூர் மாணவனை சென்னையில் உள்ள அவரது தாயாரிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
போரூர்:

வடபழனி பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்தான்.

இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த சிறுவன் கடலூர் மாவட்டம் இரும்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் ஆகாஷ் (14) என்பதும், அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆகாஷை தந்தை செந்தில் அடித்ததால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வடபழனியில் பணிபுரிந்து வரும் தாய் இந்திராவை தேடி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. உடனடியாக தந்தை செந்திலை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

வடபழனி தனலட்சுமி காலனி நடராஜன் தெருவில் உள்ள சினிமா டைரக்டர் செந்தில்நாதன் வீட்டில் இந்திரா தங்கி வேலை பார்த்து வருவது தெரிந்தது.

அவரை வரவழைத்த போலீசார் மகன் ஆகாஷை இந்திராவிடம் ஓப்படைத்தனர்.
Tags:    

Similar News