செய்திகள்
கோப்பு படம்

கும்மிடிப்பூண்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் கொடுமை

Published On 2020-01-22 08:46 GMT   |   Update On 2020-01-22 08:46 GMT
கும்மிடிப்பூண்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் செஞ்சிகுமார், தனியார் பஸ் டிரைவர்.நேற்று காலை அவர், ஷேர் ஆட்டோ பழுதானதால் நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி ஒருவரை பள்ளியில் விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அப்போது மறைவான இடத்தில் சென்றதும் மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செஞ்சிகுமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News