செய்திகள்
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள் விரட்டியடிப்பு

Published On 2020-01-17 09:32 GMT   |   Update On 2020-01-17 09:32 GMT
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று மாகேயில் உள்ள மகாத்மா காந்தி கலை அறிவியல் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, மாணவர்களில் சிலர் கிரண் பேடிக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்தனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று, கிரண்பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற மாணவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News