செய்திகள்
சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில்

சேலத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த சேலம் எக்ஸ்பிரஸ்

Published On 2020-01-17 04:30 GMT   |   Update On 2020-01-17 04:30 GMT
சேலத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பனி மூட்டம் காரணமாக மெதுவாக இயக்கப்பட்டதால் தாமதமானதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு தினமும் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக சென்னை எழும்பூரில் இருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக சேலத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரெயில் இன்று 3 மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் வேறு ரெயில்களை பிடிக்க முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்தனர்.

நேற்று சென்னையில் இருந்து இந்த ரெயில் கால தாமதமாக புறப்பட்டதாலும், மேலும் பனி மூட்டம் காரணமாக மெதுவாக இயக்கப்பட்டதாலும் 3 மணி நேரம் தாமதமானதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News