செய்திகள்
வாலிபர் பலி

பழவேற்காடு கடலில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-01-13 07:52 GMT   |   Update On 2020-01-13 07:52 GMT
பழவேற்காடு கடலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் பழவேற்காடு வந்தார். பின்னர் அவர்கள் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய விக்னேஷ் மூழ்கினார்.

அவரை நண்பர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News