செய்திகள்
சந்திரகிரகணம்

திருச்சியில் லேசாக தெரிந்த சந்திரகிரகணம்

Published On 2020-01-11 17:53 GMT   |   Update On 2020-01-11 17:53 GMT
2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நிகழ்ந்தது.
திருச்சி:

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நிகழ்ந்தது. இந்த சந்திரகிரகணம் இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணி வரை தெரியும் என்றும், இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் வானியல் வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர்.

பொதுவாக சந்திரகிரகணங்கள் முழுமையான அளவு, பாதிஅளவு, பெனும்ப்ரல் என 3 வகையாக நிகழ்கிறது. பூமியின் வெளிப்புறநிழல் மட்டுமே சந்திரனில் விழுவதால், இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருச்சியில் சந்திரகிரகணத்தை பார்ப்பதற்காக நேற்று நள்ளிரவு பலர் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். ஆனால் திருச்சியில் சந்திரகிரகணம் நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை தெளிவாக தெரியவில்லை. லேசான அளவு மட்டுமே சந்திரகிரகணம் தெரிந்தது.
Tags:    

Similar News