செய்திகள்
வந்தவாசி அருகே பைக்கில் சென்ற தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு
வந்தவாசி அருகே பைக்கில் சென்ற தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் தெய்வழகன். இவரது மனைவி வடிவழகி (வயது 49). சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கு செல்ல வந்தவாசியில் உள்ள வீட்டில் இருந்து பைக்கில் சுண்ணாம்புமேடு நோக்கி சென்றார்.
வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை சுண்ணாம்புமேடு செல்லும் சாலையில் திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்தபோது பின்னால் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் ஆசிரியை கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பைக்கில் வந்தவர்கள் வெள்ளை கலர் சட்டை, சிகப்பு கலர் டீ சர்ட் அணிந்திருந்தனர். அவர்களுக்கு சுமார் 25 வயதிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசாருக்கு பள்ளி தலைமையாசிரியை தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வந்தவாசி நகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வருகின்றனரா? என ஆய்வு செய்தனர்.
வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் தெய்வழகன். இவரது மனைவி வடிவழகி (வயது 49). சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கு செல்ல வந்தவாசியில் உள்ள வீட்டில் இருந்து பைக்கில் சுண்ணாம்புமேடு நோக்கி சென்றார்.
வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை சுண்ணாம்புமேடு செல்லும் சாலையில் திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்தபோது பின்னால் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் ஆசிரியை கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பைக்கில் வந்தவர்கள் வெள்ளை கலர் சட்டை, சிகப்பு கலர் டீ சர்ட் அணிந்திருந்தனர். அவர்களுக்கு சுமார் 25 வயதிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசாருக்கு பள்ளி தலைமையாசிரியை தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வந்தவாசி நகரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வருகின்றனரா? என ஆய்வு செய்தனர்.