செய்திகள்
கைது

திசையன்விளை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2020-01-08 07:55 GMT   |   Update On 2020-01-08 07:55 GMT
திசையன்விளை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள புதியிருப்புவிளையை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 40). இவர் திசையன்விளையில் இருந்து சைக்கிளில் புதியிருப்புவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நந்தன்குளத்தை சேர்ந்த வாலிபர்கள் வினீத் (21), விக்டர் (19), இவர்களது நண்பர்கள் தட்டார்மடம் செல்வம் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் சேர்ந்து வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஜெயமுருகன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போனை மீட்டனர்.

Tags:    

Similar News