என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழிப்பறி கைது"
- வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). இவர் காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளைச்சத்திரம் பகுதியில் தங்கி, அதே இடத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த காஞ்சிபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்னராசு என்ற சின்னா(23), வேல்முருகனை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி உள்ளார். மேலும் தரக்குறைவாக திட்டி வேல்முருகனிடம் இருந்த ரூ.1,100-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் சின்னராசுவிடம் இருந்து ஒரு கத்தி, ரூ.1,100-ஐ போலீசார் கைப்பற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்