search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி கைது"

    • வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). இவர் காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளைச்சத்திரம் பகுதியில் தங்கி, அதே இடத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த காஞ்சிபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்னராசு என்ற சின்னா(23), வேல்முருகனை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி உள்ளார். மேலும் தரக்குறைவாக திட்டி வேல்முருகனிடம் இருந்த ரூ.1,100-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து வேல்முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் சின்னராசுவிடம் இருந்து ஒரு கத்தி, ரூ.1,100-ஐ போலீசார் கைப்பற்றினர்.

    ×