செய்திகள்
தாக்குதல்

திருச்சியில் இரு தரப்பினர் பயங்கர மோதல்

Published On 2020-01-07 14:56 GMT   |   Update On 2020-01-07 14:56 GMT
திருச்சியில் பைக் ரேசில் ஈடுபட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர்.இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி திடீர்நகர் மேலவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் வீனஸ் (வயது 16). இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, ஜீவா, விஜய், ஹரி ஆகியோர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி, கபாலி, குமார் , ஹரிஹரன், விக்னேஷ் ,தினேஷ் ஆகி யோர் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். 

இதில் வீனஸ் மற்றும் அவரது நண்பர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வீனஸ் அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் ஹரிஹரன் ,பாலாஜி , கபாலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News