செய்திகள்
திருவாரூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருவாரூரில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புது பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் சர்தார்(வயது23), அப்பாஸ் முகமது(50), பாலச்சந்தின்(19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனையிட்ட போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புது பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் சர்தார்(வயது23), அப்பாஸ் முகமது(50), பாலச்சந்தின்(19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனையிட்ட போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.