செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் ஆசிரியரை கத்தியால் குத்தி நகை-பணம் பறிப்பு

Published On 2020-01-07 08:55 GMT   |   Update On 2020-01-07 08:55 GMT
மதுரையில் ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு ரூ.40 ஆயிரம், 3 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பசுமலை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் தெற்கு மாரட் வீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

செல்வக்குமார் நேற்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் வகுப்பறைக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டது.

திடீரென்று அந்த மர்ம கும்பல் ஆசிரியர் செல்வகுமாரை சரமாரியாக கத்தியால் குத்தியது. இதனால் அலறியபடி அவர் கீழே விழுந்தார்.

பின்னர் அந்த கும்பல் ஆசிரியரின் சட்டைப்பையில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.

படுகாயமடைந்த செல்வகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை குத்திவிட்டு நகை, பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News