செய்திகள்
தற்கொலை

குன்னம் அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை

Published On 2020-01-06 10:34 GMT   |   Update On 2020-01-06 10:34 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குடும்ப தகராறு காரணமாக துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலமேடு கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). இவர் அந்த பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் கடந்த 4-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டார். இதையறிந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News