செய்திகள்
கைது

ஒரத்தநாடு அருகே ஆடு திருடிய வாலிபர் கைது

Published On 2020-01-06 08:56 GMT   |   Update On 2020-01-06 08:56 GMT
ஒரத்தநாடு அருகே ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே கீழ கக்கரைப்பேட்டை கள்ளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது38). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ஆடுகள் சில திடீரென திருட்டு போய் விட்டது. இதுபற்றி அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நீடாமங்கலம் காளாச்சோரி பகுதி சேகர் மகன் மாதவன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News