செய்திகள்
தற்கொலை

கோவையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2020-01-03 10:15 GMT   |   Update On 2020-01-03 10:15 GMT
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே காதலனை உடடினயாக திருமணம் செய்ய முடியாமல் போனதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள ராஜநாராயணன் கார்டனை சேர்ந்தவர் ஆராதணன். இவரது மகள் சுவேதா (வயது 17). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

இது குறித்து தனது பெற்றோரிடம் கூறிய சுவேதா அந்த வாலிபரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அதற்கு அவரது பெற்றோர் வயது 17 தான் ஆகிறது. 18 வயது தாண்டிய உடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.

காதலனை உடடினயாக திருமணம் செய்ய முடியாமல் போனதால் கடந்த சில நாட்களாக சுவேதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சுவேதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News