செய்திகள்
தேனாம்பேட்டை டாஸ்மாக் பாரில் சுங்க அதிகாரி மீது தாக்குதல்
தேனாம்பேட்டை டாஸ்மாக் பாரில் சுங்க அதிகாரியை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தேனாம்பேட்டை டாஸ்மாக் பாரில் சுங்க அதிகாரியான உதீப்ஜெயின், சிகரெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேட்டுள்ளார்.
இதனால் பார் உரிமையாளர் கார்த்திக், சுங்க அதிகாரி உதீப்ஜெயினை தாக்கியுள்ளார். பதிலுக்கு பார் உரிமையாரும் தாக்கப்பட்டார். இதுபற்றி தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.