செய்திகள்
மின்தடை

திருச்செந்தூர் பகுதியில் 4-ந்தேதி மின்தடை

Published On 2020-01-02 12:30 GMT   |   Update On 2020-01-02 12:30 GMT
திருச்செந்தூர் பகுதியில் 4-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருச்செந்தூர்:

ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், 

வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளூர் ஆகிய ஊர்களில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News