செய்திகள்
தற்கொலை

கோவை கருமத்தம்பட்டியில் இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ விசாரணை

Published On 2020-01-02 09:53 GMT   |   Update On 2020-01-02 09:53 GMT
கோவை கருமத்தம்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெறுகிறது.
கோவை:

கோவை கருமத்தம்பட்டி கிட்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன். தறி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். இந்தநிலையில் பாலமுருகன் சில நாட்களாக பணம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சத்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கருமத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

கோவை சுல்தான்பேட்டை வீரகேரளத்தைச் சேர்ந்தவர் ரகுமணி (வயது 75). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட ரகுமணி.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News